தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடத் தீர்மானம்
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்குக் கிடைத்த சம்பள உயர்வை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பது தொடர்பில்...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_8.html
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்குக் கிடைத்த சம்பள உயர்வை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் முதலாளிமார் சங்கத்துடன் கலந்துரையாட தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தொழில் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ இன்று முற்பகல் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்குப் பொருந்தும் வகையில் தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என தெரிவித்துள்ளார்
இதேவேளை, தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ கூறியுள்ளார்.
தொழிலாளர் சட்டத்தின் அநேகமான விடயங்கள் தற்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் நீதி மற்றும் தொழில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
newsfirst.lk

