அண்ணனோ மன வேதனையில்... தம்பியோ சுகபோகத்தில்...!

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தேல்வியடைச் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பியோடிய பசில் ராஜபக்ஷ, சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டு...

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் தேல்வியடைச் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பியோடிய பசில் ராஜபக்ஷ, சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


 அண்ணன் மஹிந்தவையும், கட்சியினரையும் ஏமாற்றியதுடன் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்த பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


 இது தொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்,


 மஹிந்த ராஜபக்ஷ சிறந்த அர­சி­யல்­வாதி திற­மை­யா­னவர். பல­சாலி அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். உண்­மையை மூடி மறைக்க மாட்டேன். ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி தோல்வி கண்டு வீட்­டுக்கு போக முக்­கிய காரணம் பஷில் ராஜ­பக்ஷ ஆவார். பஷில் ராஜ­பக்ஷ எனது தந்­தையின் நல்ல நண்பர்.


 ஆனால் கடந்த ஆட்­சியில் அவர் எவ்­வாறு நடந்து கொண்டார். மக்கள் பிரதி நிதி­களை மக்­க­ளுக்கு சேவை செய்ய விடாது தடுத்தார். அடக்கு முறையை மேற்­கொண்டார் என்­பதை சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரான நீங்கள் நன்கு அறி­வீர்கள்.


 ஜனா­தி­பதி மஹிந்­தவின் தோல்­விக்கு முதன்­மை­யா­னவர் பஷில் ராஜ­ப­க்ஷ­.இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னரை நடுத்­தெ­ருவில் கைவிட்டு மக்­க­ளையும் நடுத்­தெ­ருவில் கைவிட்டு அமெ­ரிக்­கா­வுக்கு தப்­பிச்­சென்று சுக­போ­க­மாக வாழ்க்கை நடத்­து­கின்றார்.


 கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தமிழ் பேசும் மக்­களை ஓரம் கட்­டி­னார்கள். அவர்­களை மதிக்­க­வில்லை. சிங்­கள மக்­களின் வாக்­குகள் மட்­டுமே போதும் நாம் வென்று விடுவோம் என்ற மம­தையில் செயற்­பட்­டுள்ளார்.


 எனவே, தமிழ் பேசும் மக்கள் மஹிந்­தவை நிரா­க­ரித்­தனர். மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அமோக ஆத­ரவை வழங்கி வெற்றி பெறச்­செய்­தனர்.இது கடந்த கால ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நல்ல பாட­மாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 2853058107727685378

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item