முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே எமது நோக்கம் : ரணில்
பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே தமது நோ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_660.html
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையப் போவது ஐ. தே. க. அரசாங்கமாஇ சுதந்திரக் கட்சி அரசாங்கமா அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அரசாங்கமா என மக்கள் தன்னிடம் கேட்பதாகக் குறிப்பிட்ட பிரதமர். அனைத்து கட்சிகளும் இணைந்து மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்யக்கூடிய வகையில் முன்மாதிரியான அரசியல் முறையொன்றை கட்டியெழுப்புவதே தமது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார் .அனைவருக்கும் அதற்கான பொறுப்பு உள்ளதென வலியுறுத்திய பிரதமர்இ அதனைத் தெளிவுபடுத்திக் கொண்டு அனைவரும் செயற்பட்டால் எமது நாட்டை ஆசியாவின் முன்னோடி நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்றுக் காலை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
ஐக்கிய தேசியக்கட்சி தனியாக போட்டி யிடும்: கபீர் ஹாசிம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாக போட்டி யிடும் அதேவேளை கட்சியில் இணைந்து போட்டியிட யாரும் விரும்பினால் அவர்களுக்கும் கட்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள்இ உயர்கல்வி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார் .
இதேவேளை இம்முறை நடைபெற வுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாறு காணாத வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை யகமான சிறிகொத்தவில் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சி தனியாக போட்டி யிடும்: கபீர் ஹாசிம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாக போட்டி யிடும் அதேவேளை கட்சியில் இணைந்து போட்டியிட யாரும் விரும்பினால் அவர்களுக்கும் கட்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள்இ உயர்கல்வி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார் .
இதேவேளை இம்முறை நடைபெற வுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாறு காணாத வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை யகமான சிறிகொத்தவில் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

