அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகைகளைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்ரி ...

அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகைகளைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தேர்தல் பிரச்சாரத்தின் போதே தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்ரி முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல வாழ்ந்த வீட்டையே தனது உத்தியோகபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளார். கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை உத்தியோகபூர்வ நிகழ்வுக்காகப் பாவிப்பினும் தனது உத்தியோகபூர்வ இல்லமாக அதனைப் பாவிக்கப் போவதில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ள அதேவேளை அலரி மாளிகை தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றமையும் அவரும் அதனைத் தனிப்பட்ட பாவனைக்காக ஏற்றுக்கொள்ளவில்லையென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை மாகாணந்தோறும் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகைகளும் பொதுமக்கள் பார்வைக்காக எதிர்வரும் வாரம் திறந்துவிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.