நாட்டில் நாகரீகமான அரசியல் கலாசாரம் உதயமாகும் சந்தர்ப்பத்தில் இம்முறை சுதந்திர தினம்– பிரதமர்
நாகரீகமான அரசியல் கலாசாரம் உதயமாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_25.html
நாகரீகமான அரசியல் கலாசாரம் உதயமாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.இலங்கையின் முதலாவது பிரதமர் தேசப்பிதா டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரப் போராட்திற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையே கருவியாக பயன்படுத்தியதாகவும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
எவ்வாறாயினும் ஒற்றுமையை பாதுகாத்த வண்ணம் அபிவிருத்தி பயணத்தை மேற்கொள்ளும் சவாலை வெற்றிக்கொள்வதற்கு துரதிஷ்டவசமாக முடியாமற்போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாத்து அபிவிருத்தி பயணத்தை முன்னெடுப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமொன்று மீண்டும் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

