ஜனாதிபதி மைத்ரிபல சிறீசேன பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்
நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறீசேனா சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_131.html
நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறீசேனா சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பேச்சுவார்தை பிற்பகலில் நடைபெறவுள்ளது. அப்போது இரு நாடுகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இன்று காலை 10 மணிக்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மனைவி ஜெயந்தியுடன் அஞ்சலி செலுத்தினார் சிறீசேனா. பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


