இந்தியாவில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு முழுவதும் 485 பேர் பலி!
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த மாதத்தில் இருந்து 485 பேர் பலியாகியுள்ளதாகவும் இவர்களில் 216 பேர் இம்மாதத்தின் ...
https://kandyskynews.blogspot.com/2015/02/485.html
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த மாதத்தில் இருந்து 485 பேர் பலியாகியுள்ளதாகவும் இவர்களில் 216 பேர் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே முதல் 40 நாட்களில் 937 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து பிப்ரவரி 12 வரை 6,298 பேர் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.
அதே வேளையில், கடந்த ஆண்டும் முதல் 40 நாட்களில் 218 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 485 ஆக உயர்ந்துள்ளது என அந்த அறிவிப்பு சுட்டிக் காட்டுகின்றது. நாட்டிலேயே உயர்ந்த எண்ணிக்கையாக ராஜஸ்தானில் 130 பேரும், குஜராத்தில் 117 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 56 பேரும், மராட்டிய மாநிலத்தில் 51 பேரும், தெலுங்கானா மாநிலத்திலும் 45 பேரும், டெல்லியில் 6 பேரும் இதுவரை பலியாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே வேளையில், கடந்த ஆண்டும் முதல் 40 நாட்களில் 218 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை 485 ஆக உயர்ந்துள்ளது என அந்த அறிவிப்பு சுட்டிக் காட்டுகின்றது. நாட்டிலேயே உயர்ந்த எண்ணிக்கையாக ராஜஸ்தானில் 130 பேரும், குஜராத்தில் 117 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 56 பேரும், மராட்டிய மாநிலத்தில் 51 பேரும், தெலுங்கானா மாநிலத்திலும் 45 பேரும், டெல்லியில் 6 பேரும் இதுவரை பலியாகியுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

