ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக்கொடுத்துள்ளார்!- பிரசன்ன
ஊழல்களை மறைப்பதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததாக மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக நம...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_980.html?m=0

ஊழல்களை மறைப்பதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததாக மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டநிலையில் இது தெளிவாக புலப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறிக்கொள்வனவு தொடர்பிலேயே அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது.
எனினும் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.
மாறாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரசன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஒருமுறை காட்டிக்கொடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது ஐக்கிய தேசியக் கட்சியின் நன்மைக்காகவே செய்யப்பட்டுள்ளது என்றும் பிரசன்ன தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate