அரசியலில் நுழையுமாறு பல அழைப்புக்கள் வருகின்றது: ஞானசார தேரர்
அரசியலில் நுழையுமாறு தனக்கு பல அழைப்பு வந்துள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தனக்க...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_19.html?m=0
தனக்கு அழைப்பு வந்துள்ளபோதிலும் அரசியலுக்கு செல்ல தான் விரும்பவில்லை என அவர் குறிப்பிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் ஆதரவு கிடைத்து பாராளுமன்றத்திற்கு சென்ற தேரர்கள் செய்த நன்மைகள் எதுவும் கிடையாதென அவர் கூறியுள்ளார்.
தற்பொழுது அரசியலில் நுழைவதற்கு எண்ணம் இல்லை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

