இலங்கையர் ஒருவர் இந்தியாவில் போதைப்பொருளுடன் கைது
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இந்தியாவில் பாம்பன் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 50 இலட்சம் இந்திய ரூப...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_187.html?m=0

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இந்தியாவில் பாம்பன் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
50 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
பாம்பன் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் இலங்கையின் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட் சந்தேக நபரை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அவர் எவ்வாறு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார் என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Sri Lanka Rupee Exchange Rate