உம்ரா சென்றவர்கள் ஜித்தா விமான நிலையத்தில் நிர்க்கதி – பின்னணியில் ஞானசார
அனைத்தும் வியாபார மயமாக ஆகிப்போன சமகாலத்தில் ஹஜ் மற்றும் உம்ரா சேவை நடாத்திவரும் ஒரு சில முகவர்களின் நிறுவனங்களின் செயற்பாடு ஒட்டுமொ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_26.html?m=0
அனைத்தும் வியாபார மயமாக ஆகிப்போன சமகாலத்தில் ஹஜ் மற்றும் உம்ரா சேவை நடாத்திவரும் ஒரு சில முகவர்களின் நிறுவனங்களின் செயற்பாடு ஒட்டுமொத்த உம்ரா மற்றும் ஹஜ் சேவையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உம்ரா கடமையை நிறைவேற்ற அழைத்து செல்லப்பட்ட அறுவர் கொண்ட குழு (அறுவரும் பெண்கள்) ஜித்தா விமான நிலையத்தில் பொறுப்பேற்க கூட முகவர் நிலையத்தின் ஆட்கள் இல்லாமல் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து குறித்த முகவர் நிலையத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு பின்னர் குறித்த முகவர் நிலையம் அந்த உம்ரா குழுவை நேற்று பொறுப்பேற்றுள்ளது .
குறித்த உம்ரா குழுவில் சென்ற பெண்களின் குடும்பத்தினர் இந்த விடயத்தை ஊடகங்களில் வெளியிட்டு இப்படியான மோசடியை, தடுப்பது காலத்தின் கட்டாயம்….
பொதுபல சேனா அமைப்புடன் ஹஜ் விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு சென்ற குழுவில் பிரதான அங்கம் வகித்த ஒருவர் இந்த பின்னணியில் இருப்பது தெரியவந்தது.
அதனை ஊஜிதப்படுத்த அவரை பல தடவைகள் தொடர்ப்புகொண்டும் பதில் கிடைக்கவில்லை.



Sri Lanka Rupee Exchange Rate