அல்-கொய்தாவிற்கு நிதி உதவி அளித்ததா சவுதி அரச குடும்பம்?
2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு சவுதி அரச குடும்பம் நிதி வழங்கியதாக தீவிரவாதி வ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_14.html?m=0
2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு சவுதி அரச குடும்பம் நிதி வழங்கியதாக தீவிரவாதி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி இரட்டை கோபுரத்தின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மொசாயி கைது செய்யப்பட்டார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மொசாயி, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி உதவி அளித்தார்கள் என தெரிவித்துள்ளார்.
இதை சவுதிஅரேபியா அரசு திட்ட முற்றிலும் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, அரச குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate