சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 03 இலங்கையர்களும் விடுதலையாவதற்கான வாய்ப்பு
சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை இரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்துள்ளதாக வெள...
https://kandyskynews.blogspot.com/2015/02/03.html

சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை இரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்நாட்டு ஆளுநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் தலதா அத்துகொரல குறிப்பிட்டுள்ளார்.
நட்ட ஈடைப் பெற்று தண்டனையை இலகுபடுத்துவதற்கு, கொல்லப்பட்டவரின் சகோதரன் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்

